ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்!

ஆசிரியர் - Admin
ஊடகவியலாளர் படுகொலைக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்!

ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. திருமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள, படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்களும் இப்போராட்டத்தில் இணையவுள்ளன.

ஊடகப் படுகொலைக்கான நீதி கோரும் இப்போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காக குரல் கொடுக்குமாறு ஊடக அமைப்பு அழைப்பு விடுத்துள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு