2 வது ஒருநாள் போட்டி - அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

ஆசிரியர் - Admin
2 வது ஒருநாள் போட்டி - அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று நடைபெற்றது. 

நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்கள் எடுத்தது. 

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். 

இதை அடுத்து, 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடினர். 

இறுதியில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் தொடர் 1 - 1 என சமனில் உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு