இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

ஆசிரியர் - Admin
இக்கட்டான நிலையில் சிம்பு! தள்ளிபோகும் படம்

அடுத்து ஒரு பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தால் தான் முன்னணி நடிகராக நீடிக்க முடியும் என்ற நிலையில் நடிகர் சிம்பு உள்ளார்.

சிம்புவுக்கு பின் நடிக்க வந்த விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ,ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகர்களாக உயர்ந்து விட்டனர்.

நடிகர் சிம்பு கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். ஆனால் அவர் தனி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற படம் என்று பார்த்தால் அச்சம் என்பது மடமையடா படம் தான்.

இந்நிலையில் சிம்பு ‘வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தை சுந்தர் சி இயக்கி உள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. பொங்கல் பண்டிகைக்கு வருவதாக இருந்த இப்படம் , பிப்ரவரி முதல் வாரத்துக்கு தள்ளிபோயுள்ளது.

இதற்கிடையில் சுந்தர் சி விஷாலை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு