சா்வதேக அழுத்தங்கள் ஊடாக தமிழா்கள் தமக்கான நீதியையும், உாிமைகளையும் பெறவேண்டும்..

ஆசிரியர் - Editor I
சா்வதேக அழுத்தங்கள் ஊடாக தமிழா்கள் தமக்கான நீதியையும், உாிமைகளையும் பெறவேண்டும்..

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் 

இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்க வில்லை சர்வதே விசாரணைகள் ஊடாகவே நீதி கிடைக்கும்.  

அந்த நிலையில் இன்று அரசியல் தீர்வும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை உள்ளது. 

எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு