இவா்களையும் கொஞ்சம் பாருங்கள்..(பாகம்-02)

ஆசிரியர் - Editor I

நாங்கள் நிம்மதியாக இருப்பதற்கு வீடின்றியும்  எனது பிள்ளைகளை  பாடசாலை அனுப்புவதற்கு கொப்பி புத்தகங்களை  வாங்குவதற்குக்கூட வழியின்றியும் அன்றாடம் உணவிற்காகவும் கஸ்ரப்பட்டு விறகு வெட்டி  வாழ்ந்து வருவதாக 

முல்லைத்தீவு மாங்குளம்-கிழவன் குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நான்கு பிள்ளைகளின் தந்தை பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 

பனிக்கன்குளம் கிழவன்குளம் போன்ற பகுதிகளில் வாழும் அதிகளவான குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றியும் வருமானங்கள் இன்றியும் காட்டில் விறகு வெட்டியே தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றன.

கிழவன்குளம் கிராமத்தி;ல் வாழ்ந்து வரும் நான்கு பெண்குழந்தைகளின் தந்தையான  பாலசுந்தரம் ஜெகதீஸ்வரன் அவர்கள் யுத்தத்தில் ஒரு காலை இழந்தநிலையில் அவரும் அவரது குடும்பமும்  தினமும் காட்டிற்குச்சென்று 

விறகு வெட்டி அதனை வீதியில் வைத்து விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் வருமானத்தைககொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதேவேளை இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில் 

தற்காலிக வீடொன்றிலே வாழ்ந்து வருகின்றனர். ஐந்து அங்கத்தவர்களைக்கொண்ட இக்குடும்;பம் நிம்மதியாக வாழ்வதற்கு நிரந்தரமாக ஒரு வீடின்றியும் மின்சார வசதிமலசலகூட வசதி குடிநீர் வசதி எதுவுமே இ;ல்லாத நிலைபெரும் அவல வாழ்வு வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  குறித்த குடும்பத்திற்கு பிரதேசசெயலகத்தால் வழங்கப்பட்டுள்ள பங்கீட்டு அட்டையில் நிரநதர வீடு, மலசலகூடம் என்பன வழங்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளபோதும், அவை எதுவும், அவர்களிடம் இல்லாதநிலை காணப்படுகின்றது.

புதிய கல்வி ஆண்டில் பாடசாலை ஆரம்பிக்கவுள்ளநிலையில் பாடசாலைக்கான கொப்பி, புத்தகங்களைக்;கூட வாங்கமுடியாத நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும் மேற்படி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்தெரிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு