முல்லைத்தீவில் தொடரும் கனமழை.. அதியாவசிய உதவிகோரும் மாவட்ட செயலகம். (விபரங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் தொடரும் கனமழை.. அதியாவசிய உதவிகோரும் மாவட்ட செயலகம். (விபரங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழை காரணமாக வெள்ளத்தினால் 6,520 குடும்பங்களை சேர்ந்த 20,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 1,200 குடும்பங்களை சேர்ந்த 3,365 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான உடனடி உதவிகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும், பிரதேச செயலகங்களும் வழங்கிவருகின்ற அதேவேளை 

தன்னார்வ தொண்டு அமைப்புக்களும் தமது உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருகின்றனர். 

மேலும் உதவிகளை வழங்க முன்வருவோர் பிரதேச செயலாளர்களுடன் தொடர்புகொண்டு உதவிப்பொருட்களை கையளிக்கலாம்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் - 0212061626
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் - 0212061747
கரைதுறைபற்று பிரதேச செயலகம் - 0212290039
துணுக்காய் பிரதேச செயலகம் - 0212285262
மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் - 0212283460
வெலிஓயா பிரதேச செயலகம் - 0252056750

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு