யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Admin
யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் மஹோற்சவம் நாளை ஆரம்பம்

யாழ்.குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(14-12-2018) முற்பகல்- 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ச்சியாக பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல்-06 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 22 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல்-11 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-10 மணிக்குத் தீர்த்தவாருதி உற்சவமும் இடம்பெறும்.

மஹோற்சவ காலங்களில் தினமும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளதுடன், உற்சவ காலங்களில் விசேட சொற்பொழிவுகளும் இடம்பெறும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு