கஜா புயலின் வேகம் அதிகரிப்பு தாக்கம் ஆரம்பம்?

ஆசிரியர் - Admin
கஜா புயலின் வேகம் அதிகரிப்பு தாக்கம் ஆரம்பம்?

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள கஜா புயலின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், யாழ். கோட்டைப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், அங்கிருக்கும் கடைத்தொகுதிகளின் தகரங்கள் காற்றின் வேகத்தால் தூக்கி எறியப்பட்டுள்ளன.

கஜா புயல் இன்று பின்னிரவு இலங்கையின் வடக்கு மாகாண கரையோரப் பகுதியில் கரையைக் கடக்கக் கூடும் என்றும் கனமழையுடன் காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு கரையோர மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் தென்படுவதாக அறியமுடிகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு