த.தே.கூட்டமைப்புக்குள் ஆசன சண்டை.. விடாப்பிடியாக நிற்கும் ரெலோ.

ஆசிரியர் - Editor I
த.தே.கூட்டமைப்புக்குள் ஆசன சண்டை.. விடாப்பிடியாக நிற்கும் ரெலோ.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை வழங்க்கோரி நேற்றைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை ரெலோவினர் புறக்கணித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில்  உறுப்பினர் ஆசனத்தை தமது கட்சிக்குத் தர வேண்டும் என ரொலோ அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அவ வாறு வழங்கப்படாத நிலையில் கடந்த 31ம் திகதிக்கு முன்னர் அதற்கான எழுத்து மூல பதிலை வழங்குமாறு த.தே.கூட்டமைப்பின்  தலைவரிடம் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான கலந்துரையாடலிற்கு ரெலோவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றவில்லை.

இதேநேரம் நாட்டின் தற்போதைய நெருக்கடி தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் பங்குகொள்ளாத ரெலோவினர் நேற்று மாலையில் தமது  உயர்பீடத்தவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து குறித்த  தேசியப் பட்டியலை கோரியிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு