மஹிந்தவுடன் சம்மந்தன் என்ன பேசினார்..? கூட்டமைப்பின் அறிக்கையிலும் இருட்டடிப்பு.

ஆசிரியர் - Editor I
மஹிந்தவுடன் சம்மந்தன் என்ன பேசினார்..? கூட்டமைப்பின் அறிக்கையிலும் இருட்டடிப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரு. மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். 

திரு இரா. சம்பந்தன் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்தசந்திப்பில் பங்குபெறவில்லை. 

மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை. இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா. சம்பந்தனுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு