மிக விரைவில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படும். ஐனாதிபதி உறுதி..

ஆசிரியர் - Editor I
மிக விரைவில் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடாத்தப்படும். ஐனாதிபதி உறுதி..

இலங்கையில் உள்ள 9 மாகாணசபைகளுக்குமான தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். என ஐனாதிபதி மைத் திரிபால சிறிசேனா கூறியுள்ளார்.

திஸ்ஸமஹாராம, சந்தகிரிகொட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாட்டில் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் தேர்தல் ஆணைக்குழுக்களுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டு, அவ்விடயத்தில் காணப்படுகின்ற குறைநிறைகளை ஆராய்ந்து விரைவாக தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை, வடக்கு மக்களுக்கு வேண்டிய வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு வேண்டிய நிதி போதியளவு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் அவ்விடயம் தொடர்பில் அமைச்சரவையில் இதுவரைகாலமும் பேச்சுவார்த்தை மாத்திரமே இடம்பெற்றுள்ளது” எனவும் 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு