கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்.. ஜனாதிபதி மாளிகை, செயலகம் ஆகியவற்றுக்கு இராணுவ பாதுகாப்பு..

ஆசிரியர் - Editor I
கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்.. ஜனாதிபதி மாளிகை, செயலகம் ஆகியவற்றுக்கு இராணுவ பாதுகாப்பு..

தென்னிலங்கை அரசியலில் நேற்று இடம்பெற்ற அதிரடி மாற்றங்களை தொடா்ந்து கொழும்பில் உள்ள முக்கியஸ்த்தா்க ளின் வீடுகளுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், 

ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு இராணுவம் பாதுகாப்பு கடமைகளுக்காக அமா்த்தப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படையினர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வீடு மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய செயற்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

நெருக்கடியான நிலை ஏற்பட்டால் நாட்டில் அனைத்து முகாம்களிலும் உள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு