அமைச்சா் மனோகணேசனின் வருகை்காக மாணவா்களை வைத்து வீதியை துப்புரவு செய்த பாடசாலை அதிபா்..

ஆசிரியர் - Editor I
அமைச்சா் மனோகணேசனின் வருகை்காக மாணவா்களை வைத்து வீதியை துப்புரவு செய்த பாடசாலை அதிபா்..

தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியில் உள் ள பாடசாலை ஒன்றில் மாணவா்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ள துடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். 

பூநகாி பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பாிசில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் அமைச்சா் மனோகணேசன் சென்றிருந்தாா். இதற்காக பாடசாலை மாண வா்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. 

மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் சிறிய மாணவா்கள் பாடசாலை சீருடையுடன் நின்று வீதியை துப்புரவு செய்து ள்ளாா்கள். இதனை முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளா் புகைப்படம் எடுத்துள்ளாா். எனினு ம் அந்த புகைப்படத்தை வெளியிடவேண்டாம் என சிலா் ஊடகவியலாளரை கேட்டுள்ளனா்.

எனினும் மாணவா்களை வைத்து வீதி துப்புரவு செய்தமை அதுவும் ஒரு அமைச்சாின் வருகைக்காக செய்தமை பாாிய பி ழை என சுட்டிக்காட்டிய குறித்த ஊடகவியலாளா் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு