ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 18ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில்..

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளர் ம.நிமலராஜனின் 18ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.ஊடக அமையத்தில்..

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. 

முன்னதாக யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக கட்டப்பட்டு உள்ள நினைவு தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. 

அதனை தொடர்ந்து இராசாவின் வீதியில் உள்ள யாழ்.ஊடக அமையத்தில் நினைவுரைகள் ,இடம்பெற்றன. 

கடந்த  2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு