புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியடைந்தால பதவியை துறப்பேன் கூறுவது எம்.ஏ.சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியடைந்தால பதவியை துறப்பேன் கூறுவது எம்.ஏ.சுமந்திரன்..

புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை குழப்பும் வகையிலான செயற்பாடுகளை பலர் செய்து வருகின்றார்கள். அதில் ஒருவர் டக்ளஸ் தேவானந்தா என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட் டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவில் எழுப்பியிருந்த சர்ச்சையும் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை குழப்புவதற்கான திட்டமிட்ட சதி எனவும் கூறியிருக்கின்றார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் ஆமை வேகத்தில் இடம்பெற்றாலும் கூட நிச்சயமாக புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படாவிட்டால் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன். இதனை உறுதிமொழியாக வழங்குகிறேன். 

அரசியல் அமைப்பு விவகாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளோம். ஒரு வரைபு நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வரைபு 3 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரசியல் அமைப்பு பேரவைக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

கடந்த 11 ஆம் திகதி வழிநடத்தல் குழுவில் அந்த வரைபை ஆராய்ந்த போது அதில் சர்சை ஒன்று ஏற்பட்டது. குறிப்பாக மொழிபெயர்ப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அம் மொழிபெயர்பை பெற்று அதனை சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். 

எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி மீண்டும் அரசியல் அமைப்பு சபை கூடும். அதன் போது 3 மொழிகளிலும் அந்த வரைபு கையளிக்கப்படும். இதுதவிர 25 ஆம் திகதி வழிநடத்தல் குழு மீண்டும் கூடி இறுதியாக்கப்பட்ட மொழிபெயர்ப்புக்களை ஆராய்ந்து 

அனுமதி வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழிநடத்தல் குழுவில் நடைபெறும் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என்று எமக்குள் உடன்பாடு ஒன்று இருந்தாலும் கூட ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பத்திரிகைகளுக்கு அங்கு நடைபெற்ற 

விடயங் கள் தொடர்பில் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டியுள்ளது. வழிநடத்தல் சந்திப்புக்களை நடத்த ஆரம்பித்த நாட்களில் இருந்தே எப்படியாக நாட்டை வர்ணிப்பது என்பது தொடர்பில் 

பேசப்பட்ட பேது பிரதமர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். யுனிட்டரி ஸ்டேட் என்று சொல்லப்படும் ஆங்கில சொற்பதத்திற்கு ஏக்கிய ராட்சிய என்ற தவறான மொழிபெயர்ப்பு 72 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் சொல்லியிருந்தார். 

ஏக்கிய ராட்சிய என்பது ஒரு நாடு என்பதைதான் குறிக்கின்றதே தவிர அது ஆட்சி முறையை குறிக்கவில்லை என்பதையும் பிரதமர் விழக்கியிருந்தார். பிரதமர் கூறிய விழக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதினால்தான் ஏக்கிய ராட்சிய என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட முடியும் 

என்ற இணக்கப்பாட்டிற்கு வந்திருந்தோம். ஆனாலும் ஏக்கிய ராட்சிய என்பது நாட்டை மட்டும் குறிப்பது என்றும், அது ஆட்சி முறையை குறிப்பதாக அமையாது என்றும் புதிதாக ஒரு வரைவிலக்கணம் எழுதப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம். 

ஏக்கிய ராட்சி என்பதற்கான சரியான தமிழ் சொல் என்ன என்று நாங்கள் ஆராய்ந்த போது ஒற்றையாட்டி என்று சொல்லும் போது, அதில் ஆட்சி முறை குறிப்பிடப்படுவதால் அது பொருத்தமற்ற சொல் என்றும் தீர்மானிக்கப்பட்டுது. 

நாட்டில் சுபாபத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இது இருக்க வேண்டும். ஆகையால் யுனிட்டரி ஸ்டேட் என்ற செல்பதமோ ஒற்றையாட்சி என்ற சொல்பதமோ உபயோகிக்க முடியாது. ஏக்கிய ராட்சி என்பது நாட்டின் சுபாபத்தை குறிப்பது போன்று அதற்கேற்ற தமிழ் சொல்லினையும் 

கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தோம். இதன் போது நான் அடுத்த கூட்டத்தில் ஒரு முன்மொழிவை செய்திருந்தேன். ஏக்கிய ராட்சியத்திற்கு பதிலாக ஒன்றுபட்ட நாடு அல்லது ஓருமித்த நாடு என்ற சொற்பதத்தை பயன்படுத்தலாம் என்று முன்மொழிவு செய்தேன். 

இதில் ஒருமித்த நாடு என்பதை பயன்படுத்தலாம் என்று அதிகமானவர்களால் பிரேரிக்கப்பட்டது. இடைக்கால வரைபின் போது ஏக்கிய ராட்சிய சமன் ஒருமித்த நாடு என்ற சொற்றொடல் 3 மொழிகளிலும் அப்படியே உபயோகிக்கப் வேண்டும் என்றும் அதற்கான வரைவிலக்கணக்கணம் 

அந்த உறுப்புரையிலேயே கொடுக்கப்பட வேண்டும், அதற்கான விளக்கமாற அந்த சொற்பதம் ஆட்சி முறையை சம்மந்தப்பட்டதாக இல்லாது, நாட்டின் சுபாபத்தை குறிப்பதாக அதாவது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒரு நாடு என்ற வரைவிலக்கணம் கொடுக்கப்பட வேண்டும் 

என்றும் வலியுறுத்தப்பட்டது. இடைக்கால அறிக்கை இறுதி செய்யும் போதுதான் டக்ளஸ் தேவானந்தா ஒரு மித்த நாடு என்பதற்கு பதிலாக ஒரு நாடு என்ற சொல் பொருத்தமானது என்றார். 

இவ்விடயம் தொடர்பில் வழிநடத்தல் குழுவில் உள்ளவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுது. அவ்வாக்கெடுப்பில் டக்ளஸ் மட்டும் ஒரு நாடு என்றார். ஏனையவர்கள் ஒருமித்த நாடு என்பதையே ஆதரித்தனர். 

இதனடிப்படையில் தான் இடைக்கால அறிக்கையில் ஒருமித்த நாடு என்று சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் தலைவரும் இந்த விடயங்களை பகிரங்கமாக தெளிவுபடுத்தியுள்ளார். 

மீண்டும் டக்ளஸ் தேவானந்தா அந்த சர்சையை எழுப்பிய போது பிரதமர் மீண்டும் அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தார். அத்துடன் அவருடைய கருத்தியை அவர்சார்ந்த கட்சியின் நிலைப்பா டான பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாடு என்ற சொல் உபயோகிப்பதாக இருந்தால் ஏக்கிய ராட்சிய என்று சொல்லாமல் நேரடியாக ஏக்க ரட்ட என்று ஒரு நாடு என்ற சொற்பதத்தை உபயோகிக்க வேண்டும் என்பது என்றுடைய நிலைப்பாடக உள்ளது. 

அரசியல் அமைப்பில் நாட்டின் சுபாபத்தை வர்ணிக்கும் சொற்பதங்கள் பேச்சுவழங்கில் உள்ள சொற்பதங்களாக இல்லாமல் சற்று உயர்ந்த சொற்பதங்களாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். 

ஆனால் தற்போது சிறு குளறுபடி ஏற்பட்டதால் முன்னேற்ற நடவடிக்கையில் சற்று பின்னகர்வு ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பினை பின்போடு வைப்பதற்காக வேவ்வேறு சர்சைகளை வேவ்வேறு தருணங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆனாலும் அந்த சர்சைகளை எவ்வளவு தூரம் ஏற்படுத்துகின்றார்கள் என்று நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம். டக்ளஸ் தேவானந்தா அரசியல் அமைப்பு நடவடிக்கையினை பின்னகர்த்துவதற்காக செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகவே எமக்கு தோன்றுகின்றது என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு