வாகனங்களில் கழிவு அகற்றும்போது வலையால் மூட உத்தரவு..

ஆசிரியர் - Editor I
வாகனங்களில் கழிவு அகற்றும்போது வலையால் மூட உத்தரவு..

வாகனங்களில் கழிவகற்றும் போது வலைகளால் மூடலப்பட்டே கொண்டு செல்லப்பட்ட வேண்டும் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் அறிவுறுத்தி உள்ளார். அதனை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

யாழ்.நகர் பகுதிகளில் கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் கழிவுகளை ஏற்றி செல்லும் போது வலைகள் போடப்படாமல் கொண்டு செல்லப்படுவதனால் அவை வீதிகளில் பறந்து வீதியால்  செல்வோருக்கு இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

அது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வந்த நிலையில் , யாழ்.மாநகர சபை ஆணையாளர் மேற்கண்டவாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு