வலி,தெற்கு பிரதேச சபை எதிர்கட்சி உறுப்பினர் மாட்டினார்..

ஆசிரியர் - Editor I
வலி,தெற்கு பிரதேச சபை எதிர்கட்சி உறுப்பினர் மாட்டினார்..

யாழ்.ஏழாலை பகுதியில் சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏழாலை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஏழாலை வடக்கை சேர்ந்த செல்வராசா அரவிந்தன் (வயது 25) மற்றும் அவரது சகோதரனான செல்வராசா சஜீவன் (வயது 18) என்பவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த தாக்குதலில் காயமடைந்துள்ள இரு சகோதார்களும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்திய சாலை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில். , வீட்டில் இருந்த தம்மை பிரதேச உறுப்பினர் தொலைபேசி ஊடாக எம்மை அழைத்திருந்தார்.

அதன் பிரகாரம் நாம் அங்கு சென்றபோது அவரும் அவருடன் நின்ற ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் எம்மை தாக்கினார்கள் என தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு