அணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து மரணம்..

ஆசிரியர் - Editor I
அணில் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து மரணம்..

யாழில் அணில் பிடிப்பதற்காக அதனை துரத்தி சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

யாழ்.ஒஸ்மானியா வீதியை சேர்ந்த அமீர் முகமத் அருஸ் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளான். அங்கு அணில் ஒன்றினை கண்டு அதனை பிடிப்பதற்கு துரத்தி சென்றுள்ளான். அதன் போது வீட்டின் பின்புறமாக இருந்த கிணற்றினுள் தவறி விழுந்துள்ளான்.

அணிலை துரத்தி சென்ற சிறுவனை நீண்ட நேரமாகியும் காணாததால் உறவினர்கள் சிறுவனை தேடிய போது சிறுவன் கிணற்றினுள் விழுந்துள்ளதை அவதானித்து  சிறுவனை மீட்டு யாழ்.போதானா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

அதன் போது சிறுவனின் உடலை பரிசோதித்த வைத்தியர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என உறவினர்களிடம் தெரிவித்தார்.

அதனை அடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு