பாரிய ரயில் விபத்து அதிகாரிகளின் புத்தி சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பாரிய ரயில் விபத்து அதிகாரிகளின் புத்தி சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்டது..

யாழ்.கோண்டாவில் பகுதியில் நேர் எதிரே ஒரே பாதையில் இரண்டு புகையிரதங்கள் வந்த போது நடைபெறவிருந்த பெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமும் , கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதமும் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் நேர் எதிரே வந்துள்ளது.

அதனை அறிந்த புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இரு பேருந்துக்களையும் நிறுத்தியுள்ளனர்.

பின்னர் கொழும்பில் இருந்து வந்த புகையிரதம் தடம் மாற்றப்பட்டு அரை மணிநேர தாமதத்திற்கு பிறகு புகையிரதங்கள் தமது பயணத்தை தொடர்ந்தன.

அதேவேளை கடந்த வாரம் கொழும்பிலும் இரண்டு பேருந்துக்கள் நேர் எதிரே ஒரு தடத்தில் பயணித்த போதும் அதிகாரிகளின் துரித செயற்பாட்டால் அவை நிறைத்தப்பட்டு பாரிய விபத்து தடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு