தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாவாந்துறையில் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக நாவாந்துறையில் போராட்டம்..

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று காலை  நாவாந்துறை பிரதான சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. 

பல வருடங்களாக முறையான விசாரணையோ அல்லது விடுதலையோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கவேண்டிய 

நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமும் உயிர்களும் ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையற்ற வகையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் ஆகிய 

கோரிக்கைகளை வலியுறுத்தி இக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள் 

மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்கள் மனிதநேயமுள்ள சமூக செயற்பாட்டாளர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு