தமிழகத்திலிருந்து வந்த பேராசிாியா்கள் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா்..

ஆசிரியர் - Editor I
தமிழகத்திலிருந்து வந்த பேராசிாியா்கள் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா்..

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிாியா் குழு  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி எங்களுடைய அஞ்சலிகளைச் செலுத்தியிருக்கின்றோம்.

இந்த மண்ணுக்கு கலாச்சார ரீதியான பயணமாக நாம் வந்திருந்தாலும் அட்எணண்ங்க திலீபனுடைய நினைவுடத்திற்கு வந்டைதிருப்பது  உணர்வை வெளிப்படுத்துவதும் மன்னற்க மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. 

எங்களுடைய நீண்ட கால உறவையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இலங்கைக்கு  விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், 

துறைசார் வல்லுநர்கள் கொண்ட  குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர்

இந் நிலையிலேயே மேற்படி குழுவினர் திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். இக்குழுவில் தமிழ்நாடு - சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் 

பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் வழக்கறிஞர் கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், 

பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்ப்ட்டாளருமான பாண்டிமாதேவி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு