வனவள திணைக்களத்தினால் அந்தாித்து நிற்றும் ஊற்றுப்புலம் கிராம விவசாயிகள்..

ஆசிரியர் - Editor I
வனவள திணைக்களத்தினால் அந்தாித்து நிற்றும் ஊற்றுப்புலம் கிராம விவசாயிகள்..

கிளிநொச்சி மாவட்ட ஊற்றுப்புலம் குளப் புனரமைப்பு பணிகள் இடம்பெறும் நிலையில் அப்பகுதி தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எனக் கூறி  வனவளத் திணைக்களம் பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் 250 ஏக்கர் வயல் நிலம் செய்கை பண்ணப்பட்ட நிலையில் மோர் காலத்தில் சுமார் 100 ஏக்கர் நிலம் காடு சூழ்ந்துவிட்டது. இதனால் அப் பகுதிக்குள் செல்வதற்கு தற்போது வனவளத் திணைக்களம் தடுத்து வருவதனால் பல விவசாயிகள் நிலத்தை இழக்கும் நிலமை ஏற்படுகின்ற நிலையில் 

எமக்கான நீரேந்து குளத்தை புனரமைத்து தருமாறு கடந்த 3 ஆண்டுகளாக விடுத்த கோரிக்கையின் பெயரில் இந்த ஆண்டு 23 மில்லியன் ரூபா பணம் அனுமதிக்கப்பட்டு பணிகள் ஆரம்பித்தன. இந்த நிலையில் தற்போது குளத்தின் அலைகரைப் பகுதிகளும் தமது ஆளுகைப் பிரதேசம் என சொந்தம் கொண்டாடி புனரமைப்பு பணிகளையே தடுத்து விட்டனர். 

இவ்வாறு பணியை தடுத்தமையால் இந்த ஆண்டு நிறைவுக்குள் பணியை நிறைவு செய்ய முடியுமா என்ற அச்சம் விவசாயிகளான எமக்கு எழுகின்றது. அவ்வாறு நிறைவு செய்யாது விடின் பணம் திரும்பினால் மீண்டும் பணம் கிடைக்குமா என்ற அச்சமும் உள்ளது. 

இதனால் குறித்த விடயத்திற்கு தீர்வு தருமாறு மாவட்டச் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இருப்பினும் தீர்வு மட்டும் கிட்டவில்லை. என்கின்றனர். இவ்வாறு விவசாயிகளால் தெரிவிக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வனவளத் திணைக்களத்தினருடன் தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள சர்ச்சைக்குத் தீர்வை எட்டாமலா 

ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணியை ஆரம்பித்தீர்கள் என மாவட்ட கம நல உதவி ஆணையாளர் ஆயகுலனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , குறித்த குளத்தை புனரமைப்பதற்கான திட்டம் அதற்கான செலவு மதிப்பீடு கள ஆய்வுகள் என்பன எம்மால் 2017ம் ஆண்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 

அவ்வாறான பணிகளை ஆரம்பித்த காலம் முதல் ஒப்பந்தம் வழங்குவதற்கு முன்பே 3 தடவைகள் வனவளத் திணைக்களத்திற்கு எழுத்தில் கடிதம் அனுப்பியிருந்தோம். அப்பகுதியில் உங்கள் பிரதேசம் உள்ளதா. அவ்வாறாயின் அதன் எல்லையை அடையாளப்படுத்த முடியுமா. 

எனக்கோரியிருந்தோம். இந்த நிலையில் அந்த 3 கடித்த்திற்கும் பதில் வழங்கப்படவே இல்லை. ஆனால் பணியை ஆரம்பித்த பின்னர் ஓர் ஆண்டும் கடந்த நிலையில் அப் பகுதி தமது பிரதேசம் என்பதனாலேயே திட்டம் தடைப்பட்டுள்ளது. என்றார். இவ்வாறு விவசாயிகளும் கம நல உதவி ஆணையாளரும் குற்றம் சாட்டுவது தொடர்பில் 

வனவளத் திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் ஜெயச்சந்திரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , கடந்த காலத்தில் கடிதம் அனுப்பிய உண்மை இருப்பினும் அதற்கு பதிலளித்தோம். குளத்தின் அணைக்கட்டிற்காக மண் உடுக்கப்படும் பிரதேசத்தில் பல மரங்கள் உள்ளன. 

அவை அழிவடைந்து விடும் என்பதே பிரச்சணை. அதே நேரம் ஓர் குளம் இருந்தால் அது அந்த திணைக்களத்திற்கு உரித்தானது என அரச இதழ் பிரசுரித்திருந்தாள் குளத்தின் அணைக்கட்டு எத்தனை அடி உயரமோ அதன் 15 மடங்கு நிலம் அந்த திணைக்களத்திற்கே  உரியது. என்றார்.

இவ்வாறு குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகளில் சர்ச்சை ஏற்படுவமு தொடர்பில் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகத்திடம் தொடர்பு கொண்டு இரு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுத் தொடர்பில் கேட்டபோது  கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் 444 குளங்கள் உள்ளன. 

இவற்றிற்கோ அல்லது வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தக் குளத்திற்கும் வர்த்தகமாணி அறிவித்தல் கிடையாது. அதேநேரம் ஒவ்வொரு குளத்திற்கும் அனுமதிக்கப்பட அளவு நிலத்தில் இருந்து மண்ணைப் பெற்று குளத்தை புனரமைக்கும் உரிமை உண்டு. அதனால் அந்தப் பணி எந்தக் காரணத்திற்காகவும் தடைப்பட முடியாது. 

என உடனடியாக   வனவளத் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்படும். என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு