ஹெரோயின் போதை பொருளுடன் 3 போ் மானிப்பாயில் கைது..

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் போதை பொருளுடன் 3 போ் மானிப்பாயில் கைது..

ஹெராயின் உட்பட போதை பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மானிப்பாய் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளும் , மற்றுமொருவரின் உடமையில் இருந்து 50கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு