வேறு ஒருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றவா் கைது..

ஆசிரியர் - Editor I
வேறு ஒருவருடைய ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றவா் கைது..

யாழ்.நகர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் வேறு நபரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி பணத்தினை எடுக்க முயற்சித்த நபர் ஒருவர் வங்கி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்.பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். 

யாழ்.நகரின் மத்தியில் உள்ள வங்கி ஒன்றின் கிளையிலையே குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது , 

குறித்த வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஏ.ரி.எம். அட்டையை தவறவிட்டு உள்ளார். அதில் அட்டையின் ரகசிய குறியீட்டையும் எழுதி வைத்துள்ளார். 

அட்டையை தவற விட்டது உடனடியாக அது தொடர்பில் வங்கிக்கு அறிவித்துஉள்ளார். 

அந்நிலையில் தொலைந்ததாக அறிவிக்கப்பட்ட அட்டையை பயன்படுத்தி ஒருவர் பணத்தினை மீள பெற முயற்சிக்கையில் வங்கி ஊழியர்கள் சுதாகரித்து பணத்தினை மீள பெற முயன்ற நபரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் உதவியுடன் 

மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு