முதலமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவருக்குமிடையில் மீண்டும் முறுகல்..

ஆசிரியர் - Editor I
முதலமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவருக்குமிடையில் மீண்டும் முறுகல்..

அரசியல் ஆதாயத்திற்கா தனிப்பட்ட விடயத்தை பேசுவதாக இருந்தால் அவற்றை பொதுவெளியில் பகிரங்கமாக விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன் நீங்கள் அதற்கு தயாரா என வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் அனுப்பிய மின்னஞ்சலிற்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் அனுப்பிய மின்னஞ்சலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த மின்னஞ்சலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

யாழ். வர்த்தக நிலையத்தில் திருட்டு வடக்கு மாகாண சபை முக்கியபிரமுகரின் மகனும் சிக்கினார்”என்ற தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்தியை எனக்கும் வடக்குமாகாண அமைச்சர்கள், அவைத்தலைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலிற்கு எனதுநன்றிகள்.

வடமாகாண சபையின் நிறைவேற்று செயல்பாடுகளில்தான் தாங்கள் திறம்பட, ஆக்கபூர்வமாக விடயங்களை விளக்கிச் செயல்படாத தன்மை என்றுதான் இதுவரை நான் தங்களைப் புரிந்து கொண்டேன். ஆனால் அவ் விடயப் பரப்புகளிற்குஅப்பாலும் அதே வடிவிலேயே செயல்படுகின்றீர்கள் என மேற்படி செய்தியை அனுப்பியதன் மூலம் உணர்கின்றேன். 

மேற்படி விடயத்தில் தங்களது ஊதுகுழல் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வர வைத்து அதனை பரப்பி அரசியல் லாபம் தேடும் தங்கள் நோக்கத்தையிட்டு நான் பரிதாபப்படுகின்றேன். எனது மகனிற்கு 26 வயது. அவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுபவரோ அல்லது மகாண சபையில் நான்அங்கம் வகித்ததன் மூலம் ஏதாவது நன்மையை பெற்றவரோ அல்ல.

அவரது நடவடிக்கைகளிற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் தனித்துவமானவர் எனக் கூறி நான் தப்ப எண்ணுவதாகவும் கருதவேண்டாம். ஒருவரின் தனிப்பட்ட விடயங்களையோ அல்லது அவரின் குடும்ப அங்கத்தவர்களின் விடயங்களையோ அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பது அரசியல் நாகரிம் அல்ல. 

இதன் அடிப்படையிலேயே உங்களதுகுடும்ப விடயங்கள் பலவற்றினையும் தங்களது வீட்டில்தற்போது நடக்கும் விடயங்களையும் பலர் எனக்கு எடுத்துக் கூறியதோடு சபையில் பிரஸ்தாபிக்குமாறு வேண்டிக்கொண்ட போதும் நான் அவ்வாறான அநாகரிக அரசியல் செய்ய விரும்பாமையினாலேயே இதுவரை எவற்றையும் பேசியதும் இல்லை, இனி மேலும் பேசப்போறதும் கிடையாது.

இனி, மேலே தரப்பட்ட தங்கள் ஊதுகுழல் இணையத்தில் வெளியான விடயத்திற்கு வருகின்றேன். அதில் நீங்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளீர்கள். அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை பிழையென என்னால் நிரூபிக்கமுடியும். ஆனாலும் தனிப்பட்டமுறையில் நிரூபிக்காமல் பகிரங்கமாகவே நிரூபிக்க தயாராகஉள்ளேன். 

ஏற்கனவே மாகாணசபையின் கடந்த 5 ஆண்டு செயற்பாட்டில் நடைபெற்ற ஊழல்கள் , செயற்பாட்டு திறன் இன்மை , அதிகார துஸ்பிரயோகம் ,அசட்டையீனமான நிறைவேற்று செயல்பாடுகள் போன்றவற்றை பகிரங்கமாக விவாதிப்பதற்குதங்களை வருமாறு பல தடவைகள்நான் அழைத்திருந்தேன். 

தாங்கள் வெளிப்படைத் தன்மை பேணுவதாக கூறுவது உண்மையானால், அதேபோல் தங்கள் கூற்றுக்கள் உண்மையானதும் நேர்மையானதுமானால், குறித்தவிடயம் உள்ளடங்களாக வடக்குமாகாண சபையின் செயல்பாடு தொடர்பில் ஓர் பகிரங்கவிவாதத்திற்கு வருமாறு மீண்டும் சவால் விடுகின்றேன். 

அதேநேரம்தாங்கள் அனுப்பிய செய்தியைதிசை திருப்புவதாக கருதினால், அந்த விடயத்தை முதலில் விவாதித்து அதன் பின்னர் ஏனைய விடயத்திற்குள் செல்லவும் நான் பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன். .தங்களிடமிருந்து இதற்கு உறுதியான பதிலை எதிர்பார்க்கின்றேன். என்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு