முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது..

ஆசிரியர் - Editor I
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது..

தமிழீழ விடுதலை புலிகள் மீள எழுச்சி பெறவேண்டும் என ஆற்றிய உரை தொடர்பிலான விசாரணைக்காக சென் றிருந்தபோது முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

"ஜனாதிபதியின் மக்கள் சேவை" செயற்றிட்டம் யாழ்.மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் நிகழ்வில் கல ந்து கொண்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,

வடகிழக்கு மாகாணங்களில் சமகாலத்தில் இடம்பெறும் குற்ற செயல்கள் மற்றும் சமூக பிறழ்வுகள் குறித்து பேசும் போது வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெறவேண்டும் எனவும், 

தமிழீழ விடுதலை புலிகள் மீள் எழுச்சி பெற்றால் மட்டுமே மக்கள் நின்மதியாக வழலாம் எனவும் உரையாற்றியிரு ந்தார். இந்த உரை தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. 

இந்நிலையில் குறித்த உரை தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெற்று வந்தது. இதன் தொடர்ச்சி யாக இன்று விஜயகலா மகேஸ்வரன் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். 

விசாரணைக்காக சென்றிருந்தபோது பெருங் குற்றத்தடுப்பு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். இதனை பொலிஸ் ஊடக பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு