தமிழரசுக் கட்சியின் தலமை அலுவலகத்தில் குழப்பம் விளைவித்தவர் கைது..

ஆசிரியர் - Editor I
தமிழரசுக் கட்சியின் தலமை அலுவலகத்தில் குழப்பம் விளைவித்தவர் கைது..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  அலுவலகத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்  உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த ஒருவர் பல குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை முன்வைத்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அங்கு வந்த பொலிஸாரும் குழப்பத்தில் ஈடுபட்ட வரை கைது செய்து கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை விடுவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு