யாழ்.நெல்லியடியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெல்லியடியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது..

யாழ்.வடமாராட்சி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியினை மேற்கொண்டார்கள் எனும் குற்றசாட்டில் இரு பெண்களை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர். 

வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று சனிக்கிழமை காலை குறித்த வீட்டினை பொலிசார் முற்றுகையிட்ட போது , வீட்டில் இருந்த ஆண் ஒருவர் தப்பி சென்ற நிலையில் வீட்டில் இருந்த இரு பெண்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். 

அத்துடன் குறித்த வீட்டினுள் பொலிசார் தேடுதலை மேற்கொண்ட போது , 115 லீட்டர் கோடா , 10 லீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 

அதனை அடுத்து கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் , கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நெல்லியடி பொலிசார் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை தப்பி சென்றவரை கைது செய்வதற்கான முயற்சிகளையும் பொலிசார் முன்னெடுத்து உள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு