மேலதிக மாவட்ட செயலாின் வீட்டையும் விட்டுவைக்காத திருடா்கள்..

ஆசிரியர் - Editor I
மேலதிக மாவட்ட செயலாின் வீட்டையும் விட்டுவைக்காத திருடா்கள்..

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் அரச விடுதி நேற்று முன்தினம் இரவு கொள்ளையரால் உடைத்து தேடுதல் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மேலதிக அரச அதிபர் அங்கு சென்ற நிலையில் திருடர்கள் தப்பியோடிவிட்டனர்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பணியாற்றும் குணபாலனின் அரச விடுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு 3 திருடர்கள் பாதுகாப்பு கேற்றை உடைத்து உள்ளே நுழைந்த்தோடு விடுதியின் வாசல் கதவினையும உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இவ்வாறு கதவுகளை உடைத்து உள்ளே நுழைத்தவர்கள் அணைத்து இடங்களிலும் பெறுமதியான பொருட்களைத் தேடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதோடு பல பொருட்களையும் எடுத்துச் செல்ல தயாராகியுள்ளனர். இந்த நிலையில் குறித்த நேரம் மழை பொழிந்த வண்ணம் இருந்தமையினால் மேலதிக அரச அதிபர் விடுதிக்கு திரும்பியுள்ளார்.

இதனை அவதானித்த 3 திருடர்களும் கொண்டு செல்வதற்காக சேகரித்த பொருட்களையும் கைவிட்டுத் தப்பியோடியதனால் பொருட்கள் தப்பியது.

இதேநேரம் குறித்த மேலதிக அரசாங்க அதிபர் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளராக இருந்த சமயம் ஓமந்தையில் உள்ள இவரது வீட்டிற்குள் நுழைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் பணமும் கொள்ளையிடப் பட்டிருந்தமைநும் குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு