யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது..

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புப் குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டு வன்முறைகள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இதே போன்று சட்மட விரோத மணல் கடத்தல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

 இக் கூட்டத்தில் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் , யாழ் பிராந்திய சுரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரச அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர்களான ஜெயசேகரம் ,

சயந்தன் மற்றும் பிரதேச சமைத்து தவிசாளர்களும் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு