கூட்டமைப்பின் போக்கு சரியில்லை என்றால் புதிய முன்னணி ஒன்றில் களமிறங்குவேன்..

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பின் போக்கு சரியில்லை என்றால் புதிய முன்னணி ஒன்றில் களமிறங்குவேன்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் அல்லது அவர்களுடைய செயற்பாடுகள் பொருத்தமற்றதாக அமை ந்தால் அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் தனித்து புதிய முன்னணி ஒன்றின் ஊடாக தேர்தலில் களமிறங்குவேன். 

மேற்கண்டவாறு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்..

“எனது செயற்பாடுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்பஇ ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகின்றேன்.

முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை. எனக்கு அளிக்கப்பட்ட ஆணையின்படியே செயற்பட்டிருக்கிறேன். எனது ஆற்றலைக் கொண்டுஇ அதனைச் செய்திருக்கிறேன்.

எமது மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர்இ அதன் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுவேன்” – என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளைஇ புதிய கூட்டணியை அமைப்பது குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றது எனவும்இ அவரிடம் இருந்து தமக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு