தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம்..

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு மத்தியிலும் இப் போராட்டம் நடைபெற்றது.

அனுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டுமென்க் கோரி சிறையிலையே உண்ணாவுரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல தரப்பினர்களும் பல்வேறு இடங்களில் போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையிலையே அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்துவெகுஐன அமைப்புக்களாக யாழிலும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

இதனடிப்படையிலையே மழைக்கு மத்தியிலும் இன்று மாபெரும் கவனயீரப்பு போராட்டத்தை மென்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு