ஊடகவியலாளரை அச்சுறுத்திய அதிபரின் கணவர்..

ஆசிரியர் - Editor I
ஊடகவியலாளரை அச்சுறுத்திய அதிபரின் கணவர்..

சுயாதீன தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளராக பணியாற்றுகின்றவரை தென்மராட்சி பாடசாலையொன்றின் அதிபருடைய கணவர்  தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார். 

நேற்றை தினம் மதியம் வறணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் கட்டட வேலைக்கு மேசன் தொழிலாளர்களுக்கு உதவியாக மாணவர்கள் வேலை செய்துகொண்டிருந்துள்ளனர். 

இதனை அவதானித்த குறித்த ஊடகவியலாளர் புகைப்படங்களுடன் குறித்த செயற்பாட்டை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார். இதனால் குறித்த பாடசாலையின் அதிபரின் கணவர் ஊடகவியலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு 

முகநூலில் எப்படி இந்த தகவலை பகிர்வீர்கள் இதற்காக நீர் பொலிஸ் நிலையம் வர வேண்டிய நிலை ஏற்படும் என அச்சுறுத்தியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு