குழு மோதலில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்..

ஆசிரியர் - Editor I
குழு மோதலில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்..

யாழ்.திருநெல்வேலி பகுதியில் குழு மோதலில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். 

திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலய சூழலில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மது போதையில் இரு இளைஞர்கள் குழு கைகளில் இரும்பு கம்பிகள் தடிகள் உடன் மோதலுக்கு தயாராக நிற்பதாக யாழ்ப்பாண பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. 

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாண பொலிசார் விரைந்த போது , போலீசாரை கண்டதும் இளைஞர்கள் குழு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். 

தப்பியோடியவர்களில் மூவரை பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர். அதேவேளை தப்பியோடிய இளைஞர்களின் மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து கைது செய்யபப்ட்டவர்களையும் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் யாழ்ப்பாண பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

அதேவேளை குறித்த ஆலய சூழலில் இரவு வேளைகளில் கூடும் இளைஞர்கள் குழு ஆலய சூழில் மது உள்ளிட்ட போதை பொருட்களை பாவிப்பதாகவும் , அதனால் ஆலய புனித தன்மை கெடுவதாகவும் பயத்தின் காரணமாக அந்த இளைஞர்களுடன் தாம் கதைக்க செல்வதில்லை என அயலவர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு