உழவு இயந்திர சில்லுக்குள் வீழ்ந்த 3வயது சிறுவன் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திர சில்லுக்குள் வீழ்ந்த 3வயது சிறுவன் உயிாிழப்பு..

சுன்னாகம் ஐயான்புரம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திர சக்கரத்திற்குள் அகப்பட்ட 3 வயதுச சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான்

குறித்த சம்பவத்தில் வி.சஸ்மிதன் என்கின்ற சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவனாவான்.

சுன்னாகம் பகுதியில் வசிக்கும் தந்தை தொழில் நிமித்தம் தனது உழவு இயந்திரத்தில் காலையில் வீடு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பியுள்ளார். இவ்வாறு வீடு திரும்பிய தந்தை உழவு இயந்திரத்தினை தனது வீட்டிற்குள் நிறுத்தும் நோக்கில் தனது வளவிற்குல் பின்நோக்கிச் செலுத்தியுள்ளார்.

இதன்போது தந்தையின் உழவு இயந்திரச் சந்தம் கேட்டு ஓடி வந்த நிலையில் சக்கரத்தில் அகப்பட்டுக்கொண்டுள்ளான். அதனையடுத்து உடனடியாக சிறுவனை மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் வைத்தியசாலையில் குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் உயிர் பிரிந்திருந்த்தை உறுதி செய்தார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு