அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்..

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெகுஐன அமைப்புக்களின் ஒன்றிய ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால்

காலை 9 மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஐந்து மணிவரை இப் போராட்டம் நடைபெறவுள்ளது.

அனுராதபுரம் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் வடக்கில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமையவே இன்றையதினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளனர். இப் போராட்டம் தொடர்ந்து மாலை ஐந்து மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு