தியாகி திலீபனின் நினைவுநாளை ஒட்டி இடம்பெற்ற இரத்தான நிகழ்விற்கு ஆயுதத்துடன் வந்தவர் யார்?

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவுநாளை ஒட்டி இடம்பெற்ற இரத்தான நிகழ்விற்கு ஆயுதத்துடன் வந்தவர் யார்?

யாழ்.இந்துக்கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு நாளை ஒட்டி இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் ஆயுதத்துடன் புகுந்த நபரினால் குழப்பம் உருவானது.

தியாகி திலீபனின் நினைவு நாளை ஒட்டி யாழ்.இந்துக்கல்லூரி மாணவர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டு இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது சிவில் உடையில் வந்த நபர் ஒருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது. பின்னர் ஆயுதத்துடன் வந்த நபர் இரத்தானம் வழங்கிவிட் டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை துப்பாக்கியுன் வந்திருந்தவர் இராணுவ புலனாய்வாளரா? என கேள்வி எழுந்துள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு