பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் எழுப்பும் கேள்விகள்..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரிடமிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள் எழுப்பும் கேள்விகள்..

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட  இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளும், கொலைச் சதிக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் பணிக்கு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற போதும், இவை அந்தப் பிரிவின் பொறுப்பில் இருந்தமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த இலகு இயந்திரத் துப்பாக்கிகள் பம்பலப்பிட்டியில் உள்ள பொலிஸின் மத்திய ஆயுத களத் தலைமையகத்தினால், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆணையின்படியே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு