தியாகி திலீபனின் நினைவு நாளில் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வேறு நிகழ்வுகள் நடாத்த தடை..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவு நாளில் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வேறு நிகழ்வுகள் நடாத்த தடை..

தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லையினுள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்கக' கூடாது என்று யாழ்ப்பாணம் மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி தலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஒழுங்குபடுத்தல் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது. 

இதன் போது உறுப்பினர் ஒருவரால் 'தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதே வேளை, மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களின் நிறைவில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுற்றுலா தின நிகழ்வுக்காக யாழ். மாநகர சபை மைதானத்தை வழங்குவதில்லை என்று 

கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஏக மனதாகத் தீர்மானித்ததுடன், உறுப்பினர்களின் தீர்மானம் பற்றி வட மாகாண சுற்றுலாத் துறை செயலணியின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு