வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது..

வலிகாமம் வடக்கில்  வறுத்தலைவிளான் (ஜே/241) கிராமசேவையாளர் பிரிவில் உள்ள சில பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விரைவில் விடுவிக்கப்படவுள்ளது. 

காணி படிப்படியாக   மேற்படி பகுதியில் ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில் அதன் ஒரு பகுதியில் இராணுவ முகாம் காணப்பட்டது. முகாமின் ஒரு சில பகுதியே மக்கள் மீள்குடியேறும் வகையில் விடுவிக்கப்படவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தரப்பினர் தெரிவித்தனர்.

இதேவேளை விடுவிக்கப்படவுள்ள பகுதியில் உள்ள காணியில் உள்ள காணி உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் ஒட்டகபுலத்தில் விடுிக்கப்படாத இடங்களும் , கட்டுவன் காசியம்மன் கோயில் உட்பட  அப்பகுதி   காணிகளும் விரைவில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு