தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது தாக்குதல்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் மேலும் தொடர்பில் தெரிய வருவதாவது..

நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர்பபலகையை அடித்து நொருக்கியுள்ளனர்.

இதன் போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்ளார். ஆனாலும் பல பேருடைய சத்தத்துடன் அடித்து நொருக்கப்படைவதால் அச்சம் காரணமாக அவர் வெளியில் வரவில்லை.

அங்கு சத்தங்கள் குறைந்த பின்னர் வந்து பார்த்த போது பெயர்ப்பலகையை அடித்து உடைத்தவர்கள் தப்பிச்சென்று சென்று விட்டனர். இதனையடுத்து சம்பம் தொடர்பில் காட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்தியதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு