யாழ்.பொதுநூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொதுநூலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன்..

இந்தியாவின் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் யாழ்.பொது நூலகத்திற்கு ஐம்பதாயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

இதனை தமிழ் நாடு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டிடம் கையளித்தார்.

இந் நிகழ்வு யாழ்.பொது நூலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது விருந்தினர்களுக்கு கலந்து கொண்டிருந்த தமிழ் நாட்டு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர் . 

அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் கூரே, மாநகர முதல்வர்  இமானுவேல் ஆர்னோல்ட் தமிழ்த் தேசியக்கொடி கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தர், ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட இலங்கை மற்றும் இந்திய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதே போன்று வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வீசிகசாலைகளுக்கும் புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினூடாக நிதியைப் கையளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு