வடமராட்சி- சக்கோட்டையில் பதற்றம், மீனவர்கள் தொடர் போராட்டத்திற்கு முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
வடமராட்சி- சக்கோட்டையில் பதற்றம், மீனவர்கள் தொடர் போராட்டத்திற்கு முஸ்தீபு..

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர்

இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்

வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன

இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவது கூறியிருந்தார் போதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்களும் எட்டு மீனவர்கள் வடமராட்சி கடறபரப்பிற்கைள் நுழைந்து தொழிலில் ஈடுபட்ட போது வடமராட்சி மீனவர்களும் மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது

இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸாரும் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்ட போதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மேலும் சட்ட விரோதமாகத தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவவை இதற்கான அமைச்சர் உள்ளிட்ட அரசியல்  தரப்பினர்கள் தெரியப்படுத்தும் 

வேண்டுமென்றும் அப் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் கூறுகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு