கத்திகுத்தில் நிறைவடைந்த திருமண நிகழ்வு..

ஆசிரியர் - Editor I
கத்திகுத்தில் நிறைவடைந்த திருமண நிகழ்வு..

திருமண நிகழ்வில் ஏற்பட்ட கைக்கலப்பு கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.  வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த தந்தை அந்தோணிமுத்து அவருடைய  மகன் அமல்ராஜ் ஆகியோரே கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

அப்பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார். 

அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் அன்றைய தினம் நள்ளிரவு தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடாத்தியவருக்கும் அவருடைய மகனுக்கும் கத்தியால் குத்தி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். 

கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு