சன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா?

ஆசிரியர் - Admin
சன்னி லியோன் குடும்பத்தை இழக்க இது தான் காரணமா?

நீலப்பட நடிகையான சன்னி லியோன் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்றை கரன்ஜீத் கவுர் தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்’ எனும் இணைய தொடராக எடுத்து வெளியிட்டிருக்கிறார். இதன் 2-ம் பாகம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சன்னி லியோன் அளித்த பேட்டி வருமாறு:-

கே:- நீலப்பட நடிகையாக இருந்ததில் இழந்தது என்ன?

ப:- என்னோட குடும்பத்தை தான். நான் என்ன செய்கிறேன், என்னோட வேலை என்னனு என் அம்மா, அப்பாகிட்ட சொல்லிப் புரிய வைக்க முடியவில்லை. அவர்கள் என்மீது கோபப்பட்டார்கள். கடைசி வரைக்கும் அவங்க என்னைப் புரிஞ்சுக்கவே இல்லை. ஒரு பொண்ணுக்குக் குடும்பத்துல இருந்து கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவு எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

கே:- உங்கள் வாழ்க்கை தொடரில் நீங்களே நடித்த அனுபவம் எப்படி இருக்கிறது?

ப:– இந்த மாதிரியான ஒரு கதையைத் தேர்வு செஞ்சு நடிக்கிறது அவ்வளவு எளிதாக இல்லை. இதில் நடிக்கும் போதுதான் என்னோட வாழ்க்கை எவ்வளோ கஷ்டமானதா இருந்திருக்குனு தெரிய வந்தது. ஒரு ஆபாச நடிகையாக தான் என்னை எல்லோருக்கும் தெரியும். இந்த வெப் சீரீஸ் மூலமா என்னோட மறுமுகத்தை நீங்க பார்ப்பீர்கள்.

என் வாழ்க்கையில் நடந்த அழுகை, கோபம், ஏமாற்றம் மாதிரியான எல்லாவிதமான உணர்ச்சிகளையும் இன்னொரு முறை கடந்து வந்த மாதிரி இருந்தது. நான் பொதுவா எமோ‌ஷனலான ஆள் கிடையாது.

இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்ல தினந்தினம் அழுதுருக்கேன். வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், என்னோட கணவர் வெபரைப் பார்க்கும் போது தான் மனசுக்குக் கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ‘‘இதற்கு பிறகு மக்கள் என்னைப் பார்க்கிற விதமே மாறியிருச்சுனு சொல்லலாம்.

‘நான் உங்களோட பெரிய விசிறின்’னு ரசிகர்கள் சொல்லும் போது ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். ‘நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, இனிமேல் வாழ்க்கையில நீங்க சந்தோ‌ஷமா இருக்கணும்’னு ரசிகர்கள் என்கிட்ட வந்து பேசுற அந்தச் சில தருணங்கள் எனக்கு முக்கியமானது.

கே:- இதை படமாக எடுத்து தியேட்டர்களில் வெளியிட்டிருக்கலாமே?

ப:- ஒரு படம்னா 3 மணிநேரத்துக்குள்ள நீங்க சொல்ல வந்த வி‌ஷயத்தைச் சொல்லிடணும். அதுவே ஒரு வெப் சீரீஸா இருக்கும்போது, உங்களுக்கான நேரத்தை நீங்க முடிவு பண்ணிக்கலாம். இதுக்காக நிறைய தயாரிப்பாளர்களை நான் சந்திச்சப்போ, ஒவ்வொருத்தவங்களும் அவங்க ரசனைக்கு ஏத்த மாதிரி கதையை மாத்திக்கிறாங்க. அதனால், வெப் சீரீஸ்தான் பெஸ்ட்.

கே:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது பற்றி?

ப:- எங்க போனாலும் பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை நடக்கத்தான் செய்கிறது. நம்ம சமூகம் இது குறித்த விழிப்புணர்வையும்  அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் மக்களுக்குக் கத்துக்கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மட்டும் இது நடக்கலை, ஆண்களுக்கும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. யாரையும் துன்புறுத்தவோ, வற்புறுத்தவோ மத்தவங்களுக்கு உரிமை இல்லை என்பதை எல்லோரும் புரிந்து கொண்டாலே போதும்.

இவ்வாறு சன்னி லியோன் கூறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு