ஓமந்தையில் ரயிலுடன் கார் மோதி விபத்து - 4 பெண்கள் பரிதாப மரணம்! - இருவர் படுகாயம்

ஆசிரியர் - Editor I
ஓமந்தையில் ரயிலுடன் கார் மோதி விபத்து - 4 பெண்கள் பரிதாப மரணம்! - இருவர் படுகாயம்

வவுனியா- ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில், இன்று காலை 10.30 மணியளவில் கார் மீது கடுகதி ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் சம்பவ இடத்திலிலேயே பலியாகினர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில், பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்க முற்பட்ட கார் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது காரில் பயணித்த 8 பேரில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சிறுவன் ஒருவனும் காரின் சாரதியும் விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னர், காரில் இருந்து பாய்ந்து- மயிரிழையில் உயிர் தப்பினர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 பேர் பயணிக்கக் கூடிய நானோ ரகத்தைச் சேர்ந்த சிறிய வகை காரில் 8 பேர் பயணம் செய்ததே விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு