தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனுக்கு யாழ்.பல்கலைகழகத்தில் அஞ்சலி..

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் 

நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. 

தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் பல்கலைக் கழகத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியது. 

பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, ஈகச் சுடரேற்றி, மலர் சூடி அஞ்சலித்தனர். 



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு