தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில்..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தல் நல்லூரில்..

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஜந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உணவொறுப்புப் போராட்டம் செய்து வீர காவியமான தியாகி லெப். கேணல் திலீபனின் 

நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி சனிக் கிழமை காலை நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்திலும் இடம்பெற்றது. 

தியாகி திலீபன் தன் உணவொறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்த நேரத்தில் நல்லூரில் தியாகி திலீபன் நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது. 

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள், ஜனநாயக போராளிகள் கட்சியினர், முன்னாள் போராளிகள், மாவீரர், 

போராளிகள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டு, மலர் சூடி அஞ்சலி செய்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு