தியாகி திலீபன் நினைவேந்தல் நாளை காலை ஆரம்பம்! - கேளிக்கைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

ஆசிரியர் - Admin
தியாகி திலீபன் நினைவேந்தல் நாளை காலை ஆரம்பம்! - கேளிக்கைகளை தவிர்க்குமாறு கோரிக்கை

தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­ப­டும் காலத்­தில் கேளிக்­கைக் களி­யாட்­டங்­க­ளைத் தவிர்த்து திலீ­ப­னின் நினை­வு­க­ளைச் சுமந்து உணர்­வு­பூர்­வ­மாக நினை­வேந்­து­வோம் என்று ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக அந்­தக் கட்சி வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­ல், ஒடுக்­கப்­பட்ட ஓர் தேசிய இனத்­தின் அர­சி­யல், பொரு­ளா­தார, சமூக விடு­த­லையை நேசித்து, அதற்கு வலுச் சேர்த்து எம் இனத்­தின் நியா­யப்­பா­டான அடிப்­ப­டைக் கோரிக்­கை­களை முன்­வைத்து நீரா­கா­ரம் கூட அருந்­தாது உண்ணா நோன்­பி­ருந்து நல்­லூர் வீதி­யில் வளர்த்த வேள்­வித் தீயில் மூச்­ச­டங்­கிப் போன­வன்­தான் எங்­கள் தியாகி திலீ­பன்.

தியாகி திலீ­ப­னின் ஒன்­றைக் கோரிக்கை கூட இற்­றை­வரை நிறை­வே­றாத நிலை­யில் துன்­பத்­தின் நீட்­சி­யில் தமி­ழி­னம் இடம்­ப­டும் சூழ­லில் தியாகி திலீ­ப­னின் 31 ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நாளை காலை 10.10 மணிக்கு நல்­லூ­ரில் உள்ள தியாகி திலீ­பன் நினை­வி­ டத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஆரம்ப நினை­வேந்­தல் நிகழ்­வு­க­ளில் அனை­வ­ரும் கலந்­து­கொள்ள வேண்­டும் என்று அன்­பு­ரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.

தியாகி திலீ­ப­னின் நினை­வேந்­தல் நடக்­கும் காலத்­தில் உற­வு­கள் கேளிக்­கைக் களி­யாட்­டங்­க­ளைத் தவிர்த்­துத் தியாகி திலீ­ப­னின் நினை­வு­க­ளைச் சுமந்து உணர்­வு­பூர்­வ­மா­கக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று தாயக மற்­று­மு் புலம்­பெ­யர் உற­வு­களை வேண்டி நிற்­கின்­றோம். திலீ­பன் எங்­க­ளோடு இல்­லா­மல் இருக்­க­லாம், திலீ­ப­னின் கனவு இன்­ன­மும் சுவா­சித்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றது என்­றுள்­ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு