வீட்டுக்குள் புகுந்த இராணுவ சிப்பாய் நையபுடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு..

ஆசிரியர் - Editor I
வீட்டுக்குள் புகுந்த இராணுவ சிப்பாய் நையபுடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு..

பூநகரி கரியாலைநாகபடுவன் கணேஸ்குடியிருப்பு மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு புரிந்த இராணுவம் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நைய புடைக்கப்பட்ட பின்னர் இன்று காலை  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவ தாவது,  குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வீடொன்று க்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் இராணு வ சிப்பாய் ஒருவர் புகுந்துள்ளார். இதனை வீட்டில் இருந்தவர்கள் அவதானித்து,

கூச்சலிட்டு கத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு திரண்ட அயலவர்கள் வீட்டுக்குள் புகுந்தவரை பிடி த்து நையப்புடைத்துள்ளனர். இதன்போது கணேஷ் குடியிருப்புக்கு அண்மையில் உள்ள இராணுவ மு காமில் இருந்து தான் வந்ததாகவும்,

தான் ஒரு சிப்பாய் எனவும் மக்களால் மடக்கி பிடிக் கப்பட்ட நபர் கூறியுள்ளார். இதனையடுத்து முழங் காவில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த இரா ணுவ சிப்பாயை கைது செய்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவே ளை சம்பவம் குறித்து கணேஷ் குடியிருப்பு மக்கள் கூறுகையில், 

இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். அவை தொடர் பாக மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வேளை ஆதாரத்துடன் கூறுமாறு கூறுவது வழமை.

ஆனல் இன்றைய தினம் ஆதாரத்துடன் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்றும் மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றோம். என கூறியுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு